5,8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கும் இனி பொதுத்தேர்வு

     தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் 5, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்பட்டாலும் தேர்வின் முடிவில் எந்தவொரு மாணவரும் தோல்வியடையமாட்டார்கள் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். 
          தமிழகத்தில் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்துவதற்காகவே 5,8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்தாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், பழைய தேர்ச்சி முறையே அடுத்த மூன்றாண்டுகளுக்கும் அமலில் இருக்கும். இந்த ஆண்டு முதலே பொதுத்தேர்வை முறையாக செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு கூறியிருந்த நிலையில்  தமிழகத்தில் மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு மூன்று ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட ஆண்டுகளில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான செயல்பாடுகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை மேற்கொள்ளும். எனவே ஏற்கெனவே அறிவித்தபடி 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உண்டு; ஆனால் அடுத்த மூன்றாண்டுகளுக்கு எந்தவொரு மாணவரும் தேர்வில் தோல்வியடையமாட்டார்கள் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கூறியுள்ளார். மாறாக, வழக்கம்போல் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு எப்போதும் போல தேர்ச்சி வழங்கப்படும். இந்த விவகாரத்தில் மூன்றாண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படும் ஆய்வுகளைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும் என்றார்.


Post a Comment

0 Comments