டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் அரசு வேலை பறிக்கப்படும்


   டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் அரசு வேலை பறிக்கப்படும் என பணியாளர்கள் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


    பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டை உள்ள சித்திபுத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் கோயிலில் நடந்த சமபந்தி விருந்தில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்கிடம் பேசிய அவர், குரூப் 4 முறைகேடு விவகாரத்தில் அரசு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என உறுதி அளித்தார். மேலும், டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, குற்றவழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.



Post a Comment

0 Comments