10ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கக்கோரி ஆசிரியர் சங்கம் சார்பில் மனுத்தாக்கல்

    பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை தள்ளிவைக்கக் கோரி ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது. அமைச்சர் அவர்கள் தேர்வு உறுதியாக நடைபெறும் என அறிவித்தார். இந்நிலையில் 10ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கக்கோரி ஆசிரியர் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

      போக்குவரத்து வசதி இல்லாததால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் தேர்வு நடத்தினால் மாணவர்கள், ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் மாயவன் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.


Post a Comment

0 Comments