மாணாக்கர்களின் கோரிக்கையை ஏற்று சான்றிதழ் பதிவேற்றம் ஆகஸ்ட் 1 - ம் தேதி முதல் ஆரம்பம்

      அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணாக்கர்கள் சேர்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பப்பதிவு கடந்த 20-7-2020 அன்று துவங்கப்பட்டது. ஜூலை 21 -ம் தேதி வரை 1,00,620 விண்ணப்பப்பதிவுகளும் , ஜூலை 22 -ம் தேதி 53,342 விண்ணப்பப்பதிவுகளும் , ஜூலை 23 -ம் தேதி 34,924 விண்ணப்பப்பதிவுகளும் , ஜூலை 24 தேதி , 20,351 விண்ணப்பப்பதிவுகளும் பெறப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 2,09,237 மாணாக்கர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர் . இதில் , 1,27,975 மாணாக்கர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர் . மேலும் , விண்ணப்பதிவிற்கு கடைசி நாள் ஜூலை 31 ஆகும். 

     இந்நிலையில் , இன்று முதல் , அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிழ்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டு மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாணாக்கர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கோரியுள்ளனர். எனவே , மாணாக்கர்களின கோரிக்கையை ஏற்று , சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய துவங்கப்படும் நாளான ஜூலை 25 -ம் முதல் ஆகஸ்டு 5 -ம் தேதி வரை இருந்ததற்கு பதிலாக , வருகிற ஆகஸ்ட் 1 -ம் தேதி முதல் 10 -ம் தேதி வரை மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் சான்றிதழ் பதிவேற்றம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments