பள்ளிகளை நவம்பர் 16 ல் திறக்க பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு

    பள்ளிகளை நவம்பர் 16 ல் திறக்க எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளி கல்லூரி திறக்க எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர் என பதிலளித்தது.

   இதையடுத்து பேசிய நீதிபதிகள் பள்ளிகளை டிசம்பர் மாதத்திற்கு பிறகு திறக்கலாம் ஏற்கனவே திறந்து ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட விளைவுகளை கருத்தில் கொள்ள வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து இந்த வழக்கு நவம்பர் 20க்கு ஒத்திவைக்கப்பட்டது.





Post a Comment

0 Comments