தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பயிற்சி

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பயிற்சி

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்ற தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தேர்தல் பணிகள் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.

மதுரை மத்திய தொகுதி தேர்தல் அதிகாரி கோ.கோட்டூர்சாமி தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். 

பயிற்சியை மாவட்டத் தேர்தல் அதிகாரி த.அன்பழகன் தொடங்கி வைத்துப் பேசினார். இதில், வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் பணிகள், முன்னேற்பாடு பணிகள் குறித்து பயிற்சி அளித்தனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை கல்வி வாரிய பள்ளிச் செயலர் எஸ்.பார்த்தசாரதி, தலைமை ஆசிரியர் ரவி ஆகியோர் சுகாதார ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Post a Comment

0 Comments