Breaking News தமிழகத்தில் மேலும் ஒரு வார காலம் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு

BREAKING News : தமிழகத்தில் மேலும் ஒரு வார காலம் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் மேலும் ஒரு வார காலம் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு.

நாளை 23.05.2021 ( ஞாயிற்றுக்கிழமை ) ஒரு நாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி

இன்றும், நாளையும் மட்டும் தனியார், அரசுப் பேருந்துகள் வெளியூர் செல்ல அனுமதிக்கப்படும்.

*உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும் , நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும் , மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது

மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ - பதிவு தேவையில்லை

தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும்.

பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊடங்கினை 24.05.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் .

இந்த முழு ஊரடங்கு 24.05.2021 காலை முதல் நடைமுறைக்கு வரும் .

இந்த முழு ஊரடங்கு காலத்தில் கீழ்க்கண்ட செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

* மருந்தகங்கள் , நாட்டு மருந்து கடைகள் , கால்நடை மருந்தகங்கள்

* பால் விநியோகம் , குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை விநியோகம் • பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள் , பழங்கள் , தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும் , அனைத்து மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும் • தலைமைச் செயலகத்திலும் , மாவட்டங்களிலும் , அத்தியாவசியத் துறைகள் மட்டும் இயங்கும்

* தனியார் நிறுவனங்கள் , வங்கிகள் , காப்பீட்டு நிறுவனங்கள் , தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர் , வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

* மின்னணு சேவை ( E - commerce ) காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை இயங்கலாம் .

* உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும் , நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும் , மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது . Swiggy , Zomato போன்ற மின் வணிகம் ( e - commerce ) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும்

* பெட்ரோல் , டீசல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கும்

* ஏட்டி.எம் . மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும் ,

* வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடுபொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும்

* சரக்கு வாகனங்கள் செல்லவும் , அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும் .

* உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல இ - பதிவுடன் அனுமதிக்கப்படும்

*மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ - பதிவு தேவையில்லை .

* செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம் .

* தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் ( Continuous | Process Industries ) , அத்தியாவசியப் பொருட்கள் , மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ( Industries Manufacturing Essential Commodities and Medical ) equipment ) spessorCou தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்படும்.

பொது

* பொது மக்கள் நலன் கருதி , இன்று ( 22-5-2021 ) இரவு 9-00 மணிவரையிலும் , நாளை 23.05.2021 ( ஞாயிற்றுக்கிழமை ) ஒரு நாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது . - மால்கள் திறந்திட அனுமதி கிடையாது .

* வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி , இன்று ( 22.05.2021 ) மற்றும் நாளை ( 23.05.2021 ) தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதிக்கப்படும் . கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த , பொது மக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் , பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும் . மேலும் , கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி , பொது இடங்களில் முகக் கவசம் அணிவது , சமூக இடைவெளியினை கடைபிடிப்பது , கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் . மேலும் , நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் , பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெற வேண்டும் . மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments