தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14 வரை நீட்டிப்பு.

  1. மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க தமிழக அரசு அனுமதி.
  2. தனியாக செயல்படுகின்ற மளிகை , பலசரக்குகள் , காய்கறிகள் . இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . 
  3. மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு , ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிருவாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும் . . இறைச்சிக் கூடங்கள் ( Slaughter ( houses ) ) மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும் . அனைத்து அரசு அலுவலகங்களும் , 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் . 
  4. சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு , பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
  5. தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
  6. மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்களைத் தவிர இதர மாவட்டங்களில் நோய்த் தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு , ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன்

கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும் 

  1. தனியாக செயல்படுகின்ற மளிகை , பலசரக்குகள் , காய்கறிகள் , இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . 
  2. காய்கறி , பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . 
  3. மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் . மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு , ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிருவாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும் . - இறைச்சிக் கூடங்கள் ( Slaughter houses ) ) மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும் . 
  4. தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் . 
  5. அனைத்து அரசு அலுவலகங்களும் , 30 சதவிகிதம் • அனைத்து அரசு அலுவலகங்களும் , 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் , 
  6. சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு , பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் . 
  7. தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம் , வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் ( Housekeeping ) இ - பதிவுடன் அனுமதிக்கப்படும் . . மின் பணியாளர் ( Electricians ) பிளம்பர்கள் ( Plumbers ) ( கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் ( Motor Technicians ) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ - பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர் . 
  8. மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் ( விற்பனை நிலையங்கள் அல்ல ) காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . 
  9. ஹார்டுவேர் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . . வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்டும் .
  10. கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் 
  11. வாகன விநியோகப்பாளர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மட்டும் ( விற்பனை நிலையங்கள் அல்ல ) காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . 
  12. வாடகை வாகனங்கள் , டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ - பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும் . மேலும் , வாடகை டேக்ஸிகளில் , ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும் , ஆட்டோக்களில் , ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும் . பொது . நீலகிரி மாவட்டம் , கொடக்கானல் , ஏற்காடு . ஏலகிரி , குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ - பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும் .
  13. கோயம்புத்தூர் . திருப்பூர் , சேலம் , கரூர் , ஈரோடு , நாமக்கல் , திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் , ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் , ஏற்றுமதி ஆணைகள் வைத்திருப்பின் , ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும் , மாதிரிகள் அனுப்புவதற்காக மட்டும் , 10 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் . 
  14. தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் வாகனங்கள் மூலம் பொது மக்களுக்கு காய்கறி , பழங்கள் ஆகியவை விற்பனை செய்யும் திட்டம் , பொது மக்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் , இது தொடர்ந்து செயல்படுத்தப்படும் . 
  15. பொது மக்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்குமாறும் . இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடைகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் . கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த , பொது மக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் , பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் . 
Click Here to Download Lockdown Press News 05.06.2021

            மேலும் , கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி , பொது இடங்களில் முகக் கவசம் அணிவது , சமூக இடைவெளியினை கடைபிடிப்பது , கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும் , நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் , பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன்.



Post a Comment

0 Comments