14.06.2021 முதல் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் தினசரி பள்ளிக்கு வருகை புரிய பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

      10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் 10 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரை கூடுதலாக சேர்க்கை நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கு அதிக விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   அதிக விண்ணப்பங்களைப் பெறும் பாடப்பிரிவிற்கு தொடர்புடைய பாடங்களில் இருந்து 50 வினாக்களில் தேர்வுகளை நடத்தலாம் எனவும் அதன்மூலம் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 11ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 3ஆம் வாரத்தில் தொலைதொடர்பு முறையில் வகுப்புகளைத் தொடங்க வேண்டும் எனவும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சிகள் மூலமாகவும், தொலைதொடர்பு முறையிலும் வகுப்புகளை நடத்த வழிகாட்டப்பட்டுள்ளது.

   14.06.2021 முதல் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் தினசரி பள்ளிக்கு வருகை புரிய வேண்டுமென பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

     பார்வையில்‌ கண்ட அரசாணையின்‌ படி, நாடு முழுவதும்‌ கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்‌ நலன்‌ கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம்‌ வகுப்புப்‌ பொதுத்தேர்வு நடத்தப்படமாட்டாது எண மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்‌ மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண்‌ வழங்குவது, உயர்கல்வி பயிலுவதற்காண சான்றிதழ்கள்‌ வழங்குவது சார்ந்த பணிகள்‌ நடைபெற உள்ளதாலும்‌ மாணவர்கள்‌ சேர்க்கை ஆரம்பிக்கப்பட உள்ளதாலும்‌ மற்றும்‌ மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாட புத்தகங்கள்‌ மற்றும்‌ கற்றல்‌ கற்பித்தலுக்கு தேவையான இதர நலத்திட்டங்கள்‌ வழங்க வேண்டி உள்ளதாலும்‌, பள்ளி வளாகம்‌ மற்றும்‌ வகுப்பறைகளை சுத்தம்‌ செய்வது சார்ந்தும்‌ மற்றும்‌ மாணவர்கள்‌ கல்வி தொலைக்காட்சி கற்றல்‌ சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிட செய்வது சார்ந்தும்‌, அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ (தொடக்கப்பள்ளி முதல்‌ மேல்நிலைப்பள்ளி வரை) பணிபுரியும்‌ தலைமையாசிரியர்கள்‌ மற்றும்‌ அலுவலகப்‌பணியாளர்கள்‌ அணைவரும்‌ அரசின்‌ வழிகாட்டு நெறிமுறைகளை (901) பின்பற்றி 14.06.2021 முதல்‌ பணிக்கு வருகை புரிய வேண்டுமென இதன்‌ மூலம்‌ அறிவுறுத்தப்படுகிறது.. இதனை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும்‌ உறுதிசெய்திட கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.




Post a Comment

0 Comments