மத்திய அரசு கணக்கெடுப்பு கல்லுாரிகளுக்கு உத்தரவு

மத்திய அரசு கணக்கெடுப்பு கல்லுாரிகளுக்கு உத்தரவு
நாட்டில் உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்தவும், உயர்கல்வி நிறுவனங்களின் கல்வித்தரம், உள்கட்டமைப்பு வசதிகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும், தேசிய அளவில் உயர்கல்வி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இதற்காக, கடந்த கல்வி ஆண்டில், உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த கணக்கெடுப்புக்கான ஆன்லைன் விபரப் பதிவு துவங்கியுள்ளது.

இதில், தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகள் பங்கேற்று, உரிய காலத்திற்குள் மத்திய அரசு கேட்கும் விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்யும்படி, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments