TET வழக்கு - விசாரணை தேதிக்கு ஒத்திவைப்பு.

TET வழக்கு - விசாரணை தேதிக்கு ஒத்திவைப்பு.
Click here to Download
இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு.

தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையைச் சார்ந்த இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் பதவி உயர்வினைப் பெற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அதனையடுத்து இரு தரப்பினரின் முழுமையான விவாதங்களை முன்வைக்கும் பொருட்டு வருகின்ற 15.10.2024 அன்று விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்.

TET case 15.10.2024 அன்று பட்டியலிடப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments